மேட்டூரில் விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்
சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மேட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். சிறுவர்கள் சிலைகளை இன்றைய தினமே அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் பெயர் சந்தோஷ்,14, நந்தகுமார், 14 என்பதாகும். பள்ளி விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலையை நீரில் கரைக்கச் சென்ற அந்த மாணவர்கள் கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications