மேட்டூரில் விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்
சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மேட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். சிறுவர்கள் சிலைகளை இன்றைய தினமே அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் பெயர் சந்தோஷ்,14, நந்தகுமார், 14 என்பதாகும். பள்ளி விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலையை நீரில் கரைக்கச் சென்ற அந்த மாணவர்கள் கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications