இதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுவாங்களா? சிறுவர்கள் உள்பட 6 பேர் பகீர் வாக்குமூலம்! ஷாக்கான சேலம்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமத்தில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர்கள் கூறிய தகவல் நடுங்க வைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மாதா கோவில் தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாதா கோவில் தெருவில் உள்ள 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது. இந்த பெட்ரோல் குண்டுகள் வீட்டின் சுவரில் பட்டு கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் வெடிகுண்டால் உயிர் சேதம், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக பெரியநாயகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 20), சாரதி, கோபாலகிருஷ்ணன் (20), சந்தோஷ்குமார் (20) மற்றும் 2 சிறுவர்கள் என 6 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய காரணம் தான் அதிர்ச்சியாக அமைந்தது. இதுதொடர்பாக 6 பேர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:
‛‛சம்பவத்தன்று 3 பேர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த பெரியநாயகம் உள்ளிட்டவர்கள் பைக்கை நிறுத்தி 3 பேரையும் மெதுவாக செல்லும்படி அறிவுரை கூறியதோடு, எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேரும் கோபமடைந்துள்ளனர். இதையடுத்து இரவில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மேலும் 3 பேரை அழைத்து கொண்டு 2 பைக்கில் வந்து வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
பொதுமக்கள் பிடிக்க முயன்ற நிலையில் அவர்கள் பைக்கில் எஸ்கேப் ஆகியுள்ளனர். பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்த கோபத்தில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது'' என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications