இதுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசுவாங்களா? சிறுவர்கள் உள்பட 6 பேர் பகீர் வாக்குமூலம்! ஷாக்கான சேலம்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமத்தில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவர்கள் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர்கள் கூறிய தகவல் நடுங்க வைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நாராயணம்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மாதா கோவில் தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாதா கோவில் தெருவில் உள்ள 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

2 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது. இந்த பெட்ரோல் குண்டுகள் வீட்டின் சுவரில் பட்டு கீழே விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பைக்கில் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த பெட்ரோல் வெடிகுண்டால் உயிர் சேதம், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருப்பினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் தொடர்ச்சியாக பெரியநாயகம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 20), சாரதி, கோபாலகிருஷ்ணன் (20), சந்தோஷ்குமார் (20) மற்றும் 2 சிறுவர்கள் என 6 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறிய காரணம் தான் அதிர்ச்சியாக அமைந்தது. இதுதொடர்பாக 6 பேர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது:
‛‛சம்பவத்தன்று 3 பேர் பைக்கில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த பெரியநாயகம் உள்ளிட்டவர்கள் பைக்கை நிறுத்தி 3 பேரையும் மெதுவாக செல்லும்படி அறிவுரை கூறியதோடு, எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் அவர்கள் 3 பேரும் கோபமடைந்துள்ளனர். இதையடுத்து இரவில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மேலும் 3 பேரை அழைத்து கொண்டு 2 பைக்கில் வந்து வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
பொதுமக்கள் பிடிக்க முயன்ற நிலையில் அவர்கள் பைக்கில் எஸ்கேப் ஆகியுள்ளனர். பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்த கோபத்தில் அவர்கள் 6 பேரும் சேர்ந்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது'' என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications