Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி அருகே இன்னொரு நிஜ ஜெய்பீம்?போலீஸ் விசாரணைக்கு அழைத்துப் போன மலைக்குறவர்கள் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

சேலம்: கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு என அழைத்துச் சென்ற மலைக்குறவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் பழங்குடியினர் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் கிருத்திகா சீனிவாசன்.

Recommended Video

    கள்ளக்குறிச்சி அருகே இன்னொரு நிஜ ஜெய்பீம்? | Oneindia Tamil

    நடிகர் சூர்யா நடித்து பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது ஜெய்பீம் திரைப்படம். இத்திரைப்படத்தின் கருவே போலீஸ் கஸ்டடியில் இருளர் அல்லது குறவர் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார் என்பதுதான்.

    ஜெய்பீம் படம் உண்மை சம்பவம்

    ஜெய்பீம் படம் உண்மை சம்பவம்

    இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிஜ சம்பவம். ராஜாக்கண்ணு என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் வேறு இடத்தில் வீசிவிட்டனர். இதற்கு நீதி கேட்டு பேராசிரியர் கல்யாணி மூலம் முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கை நடத்தி காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுத்தந்தார். இதுதான் படத்தின் கதை. இதேபோல் போலீஸ் லாக்கப் மரணங்களை வெளிப்படுத்தக் கூடிய விசாரணை போன்ற படங்களும் வெளியாகி இருக்கின்றன.

    போலீஸ் கஸ்டடியில் 5 மலைக்குறவர்கள்

    போலீஸ் கஸ்டடியில் 5 மலைக்குறவர்கள்

    இப்போது ஜெய்பீம் படம் பேசுபொருளாகி இருக்கும் இந்த நிலையிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளதைதான் பத்திரிகையாளர் கிருத்திகா சீனிவாசன். இன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையன்று கள்ளக்குறிச்சி போலீசாரால் 5 மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டனர். எந்த ஒரு பிடிவாரண்ட்டோ அல்லது உறவினர்களுக்கு தகவலோ சொல்லாமலே 5 மலைக்குறவர்களும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    போலீஸ் விடுவிப்பதாக சொன்ன 2 பேர் கதி என்ன?

    போலீஸ் விடுவிப்பதாக சொன்ன 2 பேர் கதி என்ன?

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரின் கைரேகைகள் ஒரு திருட்டு சம்பவத்தில் ஒத்துப் போகின்றன. அவர்களைத் தவிர எஞ்சிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை அனுப்பிவிடுவோம் என்றனர். ஆனால் இதுவரை எஞ்சிய 2 மலைக்குறவர்களையும் போலீசார் விடுவிக்கவில்லை. அவர்கள் 2 பேரின் கதி என்ன என்பதும் தெரியவில்லை என கீர்த்திகா சுப்பிரமணியம் பதிவிட்டுள்ளார்.

    போலீஸ் திருந்தவே மாட்டார்களா?

    போலீஸ் திருந்தவே மாட்டார்களா?

    இத்தனைக்கும் ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசார் எத்தனை கொடூரமாக நடந்து கொண்டனர் என்பதை காட்டியதால் போலீஸ் மீது கடும் கோபத்தை பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தியிருக்கிறது. போலீசாராக நடித்த நடிகர்கள் தங்களது பேட்டிகளிலேயே இதனை தெரிவித்தும் இருக்கின்றனர். ஆனால் சமூகத்தில் இப்படி ஒரு தாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் போலீசார் தமது அடக்குமுறை அப்பாவிகள் மீது காட்டுவதைத்தான் மன்னிக்க முடியாது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+