ஆ.. ஆபத்து.. டெம்போ டிரைவர்கள் அரசு பஸ் ஓட்டுறாங்க! எங்களுக்கு ஏமாற்றம்.. தொழிற்சங்கத்தினர் புகார்
சேலம்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக டெம்போ ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி குற்றம்சாட்டி உள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிஐடியு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தாலும் திமுகவின் தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் மெய்யனூரில் உள்ள போக்குவரத்து பனிமனையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தினர் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேட்டியளித்த அண்ணா தொழிற்சங்க தலைவர், "எங்களுடைய கோரிக்கை என்பது பொங்கல் பண்டிகை சமயத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். இதை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடனடியாக எங்களை அழைத்து பேசுகிறோம் என்று அறிவிப்பு கொடுத்து உள்ளார்.
இன்று 50 சதவீத போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 50 சதவீத தொழிலாளர்களை வைத்து 100 சதவீதம் பேருந்துகளை இயக்குகின்றனர். மீதம் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், கல்லூரி பேருந்துகளை ஓட்டுபவர்கள், அறைகுறை ஓட்டுநர்கள், டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறார்கள். இது பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்தது இல்லை. அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 21 சதவீதம் நாங்கள் கொடுத்தோம். அதை நீங்கள் குறைவு என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது நாங்கள் கொடுத்ததையாவது கொடுங்கள். அதை உடனடியாக கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆனால், பேச்சு வார்த்தைக்கே எங்களை அழைக்கவில்லை. எங்களை மதிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் கூட்டணியில் சிஐடியு தொழிலாளர்களே எங்களுடன் இணைந்து போராடுகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றார்கள். ஆனால், எங்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுவரை காதுகொடுத்து கேட்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் என்பதை இந்த பேச்சுவார்த்தை தோல்வி மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்கள். உடனே இதை மாற்றி அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும். இன்று பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால், எல்லா பேருந்துகளும் காலியாகவே செல்கின்றன. 50 சதவீதம் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதுதான் உண்மை. எனவே அரசு ஈகோ பார்க்காமல் எங்களை அழைத்துப் பேசவேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications