மக்களுக்கு நல்லது செய்யவே எனக்கு நேரம் பத்தவில்லை! பதில் சொல்லி நேரத்தைவீணடிக்கமாட்டேன் -ஸ்டாலின்
சேலம்: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லை என்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தாம் தன்னுடைய இலக்கை நோக்கி நடந்து கொண்டிருப்பதாகவும் அண்ணா கூறியதை போல் வாழ்க வசவாளர்கள் என்பதையே தானும் கூற விரும்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஓராண்டு சாதனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் தொடங்கும் என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் முன்கூட்டியே கூட்டம் தொடங்கியது. அதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,தமிழக அரசு இதுவரை என்னவெல்லாம் மக்களுக்கு செய்திருக்கிறது என்பதை பட்டியலிட்டார்.

நேரம் போதவில்லை
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லைஎன்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை எனவும் கூறினார். திமுக ஆட்சி அமைந்தவுடன் தாம் தொடங்கியமுதல் பணி பாசன கால்வாய்களை தூர் வாரியது தான் எனக் கூறினார். பல்வேறு
மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே பணக்கம் குறைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் மாவட்டம்
கடந்த அதிமுக ஆட்சியில் தாம் சேலம் வருகை தந்த போது, முதலமைச்சராக இருந்தஎடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்பதால் பெரியளவில் இங்கு நம்மிடம் மக்கள்புகார் அளிக்கமாட்டார்கள் என தாம் நினைத்ததாகவும், ஆனால் வந்த பிறகு தான்தெரிந்தது இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக தன்னிடம் மக்கள் எடப்பாடிபழனிசாமியை பற்றி புகார் கூறினார்கள் எனவும் கூறினார். அந்தளவு சொந்தமாவட்டத்துக்கு மட்டுமல்ல சொந்த சொகுதியான எடப்பாடிக்கும் அவர் எதுவும்
செய்ய வில்லை என விமர்சித்தார்.

234 தொகுதிகள்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொகுதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிஎன்று வேறுபட்டு பார்க்காமல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் தனதுதொகுதியாக பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். திமுக இன்று இந்தளவுக்குஅதிகாரமிக்க இடத்தில் இருப்பதற்கும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாகதிகழ்வதற்கும் காரணமே தொண்டர்களும், நிர்வாகிகளும் தான் என ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications