திமுக நிர்வாகி சுட்டுக்கொலை.. கல்வராயன் மலைப்பகுதியில் கேட்ட சத்தம்.. போலீசார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45) விவசாயி. கிரான்காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் இவரது உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்,இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் இறந்துவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்ய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக பிரமுகர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications