திமுக நிர்வாகி சுட்டுக்கொலை.. கல்வராயன் மலைப்பகுதியில் கேட்ட சத்தம்.. போலீசார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45) விவசாயி. கிரான்காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் இவரது உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்,இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் இறந்துவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்ய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக பிரமுகர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
வேட்பாளரை மாற்றுங்க.. அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட.. தாம்பரம் எம்எல்ஏ SR ராஜா ஆதரவாளர்கள் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!












Click it and Unblock the Notifications