கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை... தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை -முதலமைச்சர் திட்டவட்டம்
சேலம்: கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைக்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
மேலும், கொரோனா தமிழகத்தில் சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என அவர் உறுதிப்படக் கூறினார்.

ஈரடுக்கு மேம்பாலம்
சேலத்தின் புதிய அடையாளமாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதற்காக நேற்று மாலையே சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் சென்றுவிட்டார். இன்று திறந்து வைக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்திற்கு மறைந்த ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாநகரின் வணிகப்பகுதியான லீ பஜாரில் கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் மதிப்பு ரூ.46.35 கோடியாகும்.

திடமாக மறுப்பு
ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது கொரோனா தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை என்றும், கொரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை எனக் கூறினார். அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை அரசு மறைப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் அதனை திடமாக மறுத்திருக்கிறார் முதல்வர்.

உயிரிழப்பு குறைவு
இதேபோல் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இன்னும் மாறவில்லை என்றும், சென்னையில் நெருக்கடியான பகுதிகளில் மக்கள் நெரிசலாக வசிப்பதால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவிலேயே கொரோனா உயிரிழப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் கொரோனாவுக்கு இருக்கும் ஒரே மருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் வழிமுறைகளை பின்பற்றுவது தான் என தெரிவித்தார்.

ஆங்காங்கு ''செக்''
தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுப்பதற்காக தான் ஆங்காங்கு ''செக்'' வைத்துள்ளதாக கூறினார். இதனிடையே செய்தியாளர் ஒருவர், ஊரடங்கு தளர்வு குறித்து கேட்டபோது, ஊரடங்கில் தான் போதுமான வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதே, இன்னும் என்ன தளர்வு வேண்டும் என வினவினார். வழிபாட்டு தலங்களை திறந்த மாநிலங்கள் இப்போது அதனை மூடும் திட்டத்தில் இருப்பதாக கூறினார். சேலம் சொந்த ஊர் என்பதால் அங்கு எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும் வழக்கமாக உற்சாகமாக முதல்வர் பேசுவார் முதல்வர். அந்த வகையில் இன்றும் அதே உற்சாகத்துடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications