Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் மேட்டூரில் பெண் தேர்தல் அதிகாரி திடீர் தற்கொலை.. பெரும் அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் பெண் தேர்தல் அதிகாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற போகிறது. தமிழகத்தில் தான் முதற்கட்ட தேர்தல் நடைபெற போகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற போகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவு பெற்றது. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுவிட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.

Female election officer hangs herself in Mettur Salem district

தேர்தல் பணிகளில் மாவட்ட ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் காவல் பணியிலும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அரசு அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு வழக்கமான பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்..

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக 37 வயதாகும் நர்மதா என்பவர் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் மணிகண்டன் சபரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது..

கடந்த சில நாட்களுக்கு முன்பு நர்மதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியிருக்கிறார்,

இதனிடையே மன அழுத்தம் காரணமாக நர்மதா பாதிக்கப்பட்டு இருந்தாராம் மேலும் அன்று இரவு வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட நர்மதா நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை.. இதனிடையே நர்மதா நீண்ட நேரமாக வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு துணை தாசில்தார் நர்மதா தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து நர்மதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+