சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர்.

இது தொடர்பாக அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கருகி உயிரிழந்தனர்.
கார்த்திக், புஷ்பா, மகேஷ்வரி மற்றும் சிறுவர்களான சர்வேஷ், முகேஷ் ஆகியோர் தீயில் கருகினர். கார்த்திக்கின் சகோதரர் அன்பழகன் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications