மூச்சிரைக்க போலீசுக்கு வந்த ஜோடி.. பவித்ரா கடத்தப்பட்டாரா.. மாரியப்பன் தம்பியின் காதல் "சுபம்"
மாரியப்பன் தம்பி திருமணத்தில் சேலம் போலீசார் சமரசம் செய்துள்ளனர்
சேலம்: கடுமையான எதிர்ப்பையும் மீறி காதலியை கரம்பிடித்தார் தங்க மாரியப்பனின் தம்பி.. இதனால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவரது தம்பி கோபி.. 24 வயதாகிறது.. இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார்... இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்... எனவே, கடந்த 24-ந்தேதி இந்த காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது.

அண்ணாமலை
இந்நிலையில்தான், பவித்ராவின் அப்பா அண்ணாமலை, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் கூறியிருந்தார். அதில், "நான் வவிசாய கூலி வேலை செய்து வருகிறேன்.. எனக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.. மூத்த மகள் பவித்ராவுக்கு 20 வயதாகிறது.. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி காலையில் இருந்து பவித்ராவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மாரியப்பன்
எங்கள் ஊரைச் சேர்ந்த மாரியப்பனின் தம்பி கோபி, அவரை கடத்தி சென்று விட்டார். பெங்களூருவில் உள்ள மாரியப்பன் வீட்டில் பவித்ராவை அடைத்து வைத்துள்ளனர். மாரியப்பனின் மனைவி ரோஜாவின் பாதுகாப்பில் என்னுடைய மகளை வைத்துள்ளனர். இதற்கு ஜெகநாதன், ராகுல்காந்தி, கிரிநாத், வசந்த் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்... அவர்களிடமிருந்து மகளை மீட்டு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்... இந்த புகாரின் பேரில் விசாரணையும் ஆரம்பமானது..

தஞ்சம்
ஆனால், இதனிடையே, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பவித்ராவுடன் கோபி, சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.. தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊரைவிட்டு வெளியேறி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும் பவித்ரா ஸ்டேஷனில் சொன்னார்.. அத்துடன், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காதல் ஜோடி போலீசாரிடம் கேட்டுக் கொண்டது..

சமாதானம்
இதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மகளிர் போலீசாரும் இரு வீட்டாரையும் அழைத்து சமரச் பேச்சுவார்த்தை நடத்தினர்.. பவித்ரா கோபியுடன் செல்வதாக சொன்னார்.. அதன்படியே இரு வீட்டினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.. தங்கம் வென்ற மாரியப்பன் சகோதரர் மீது புகார் வந்ததால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது..
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications