ஜிஎஸ்டி பணத்தில் சொந்த செலவு...கண்டுபிடித்தும் கண்டுக்கல..இப்போ கம்பி எண்ணும் வணிகர்
சேலம் : ரூ.7.75 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வசூல் பணத்தை தனது சொந்த செலவினங்களுக்காக பயன்படுத்தியதுடன், ஜிஎஸ்டி துறை தொடர்ந்து அறிவுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாத நபர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளின் பேரில் சேலம் மத்திய சரக்கு - சேவை வரி ஆணையகத்திற்குட்பட்ட பதிவு பெற்ற வரி செலுத்தும் வணிகர் ஒருவர் 7.75 கோடி ஜிஎஸ்டி வரி வசூலித்து அதனை அரசு கணக்கில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜிஎஸ்டி துறையின் தொடர்ச்சியான நினைவூட்டல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டும் அந்த வரி ஏய்ப்பாளர் தான் வசூல் செய்த ஜிஎஸ்டி தொகையினை அரசுக்கணக்கில் செலுத்தவில்லை. மாறாக அவர் தனது வேறு வகை செவலினங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட வரி ஏய்ப்பாளர் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி தொகையை 3 மாதங்களுக்கு மேலாக வரி செலுத்துபவர் தன்வசம் வைத்து கொள்ளுதல் கூடாது. இவ்வகை விதிமீறல்கள் மத்திய சரக்கு - சேவை வரி சட்டத்தின்படி தண்டனைக்குரியது. இதன்மூலம் வணிகர்கள், வரி செலுத்துபவர்கள் தாங்கள் வசூலித்த ஜிஎஸ்டி தொகையினை உரிய நேரத்திற்குள் அரசுக்கு செலுத்த வேண்டும். காலமுறை படிவங்களை உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி சட்டத்திற்கு உரிய கட்டாயமான பொறுப்புகளை தவறாமல் கடைபிடித்து தேச கட்டமைப்புக்கு பங்களித்து தேச வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என சேலம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் மீனலோச்சனி தெரிவித்துள்ளார் .
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications