காலை உணவு திட்டத்தில் சமைக்க வந்த ஊழியருக்கு அதிர்ச்சி.. சுவரில் மனிதக்கழிவு: சேலத்தில் ஒரு கொடூரம்!
சேலம்: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள், சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் சமையற்கூட சுவரில் மனிதக் கழிவுகள் பூசப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் மர்ம நபர்கள் மனித கழிவை பூசி சென்றுள்ளனர். விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை, காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாச்சலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அப்பகுதியில் பலர் குடித்துவிட்டு மது பாட்டில்களை போடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்திட கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
காலை உணவுத்திட்ட சமையற்கூடத்தின் மீது மனிதக் கழிவு பூசிய நபர் குறித்து அப்பகுதி மக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், காலை உணவுத் திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் சமையற்கூட சுவரில் மனித கழிவுகளைப் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த சம்பவம் நடந்து 10 மாதங்களைக் கடந்த பிறகும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடந்த இச்சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications