தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நீர் திறந்து விடப்படுவது குறித்து முன்னெச்சரிக்கையாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை சார்பில் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (28.06.2025) நண்பகல் 12.00 மணியளவில் 117.390 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 75,000 கன அடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வரிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இக்கடிதம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மாயிலாடுதுறை, நாகபட்டினம் மற்றும் கடலூர் என 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும்
அரசு செயலாளர் நீர்வளத்துறை, அரசு முதன்மை செயலாளர் ஆணையாளர், 11 மாவட்டங்களின் முதன்மை தலைமைப்பொறியாளர், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டாட்சியர், ஆணையாளர், உதவிப்பொறியாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் முதலில் சேலம் மாவட்டத்தின் நீர் நிலைகளை நிரப்புகிறது. அதனை தொடர்ந்து, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பாய்கிறது. அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறையில் காவிரியுடன், பவானி ஆறும் இணைகிறது. இதனால் நீர் அதிகரிக்கிறது. இதன் பின்னர் திருச்சிக்கு வந்து அங்கு இரண்டு பகுதிகளாக பிரிகிறது.
1. காவிரி ஆறு
2. கொள்ளிடம் ஆறு
காவிரி ஆறு திருச்சியிலிருந்து டெல்டா மாவட்டங்களை நோக்கி பாய்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீர் நிலைகளை நிரப்புகிறது. இரண்டாவதாக உள்ள கொள்ளிடம் ஆறு, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பாய்கிறது. இறுதியாக இரண்டு ஆறுகளும் வங்கக்கடலில் கலக்கின்றன.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications