50 அடியை அதிரடியாக எட்டிய மேட்டூர் அணை.. கர்நாடகா கதவை சாத்தினாலும் வருண பகவான் கருணை
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை எட்டியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடிநீருக்காக மட்டுமே விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. பல ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளில் நீர் இருப்பு அபரிமிதமாக இருந்தாலும் ஷட்டர்களை மூடிவிட்டது கர்நாடகா. தமிழகத்தின் பங்கு தண்ணீரை கர்நாடகா தர மறுத்தாலும் வருண பகவான் கருணையினால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு கறார் காட்டி வருகிறது. கேட்டால் தங்களுக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று காரணமும் சொல்கிறது. உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுக்க தமிழகத்திற்கு சற்றுதான் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. ஆனால், அதற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு, உருவ பொம்மை எரிப்பு என போராட்டங்கள் தீவிரமடைந்தன
காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வராததாலும், மழை பொய்த்துப்போனதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணை வறண்டது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 10ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த தமிழகத்திற்கு அக்டோபர் 31 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு போட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு செவி சாய்க்க மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகா கதவை சாத்தினாலும் வருணபகவான் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயரத் தொடங்கியது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 4,334 கன அடி என்று இருந்த தண்ணீர் வரத்து 4,496 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 50.50 அடியை எட்டியது. அணையில் 18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டும் திறக்கப்படுகிறது.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications