வாழப்பாடியில் கேட்ட வினோத சத்தம்.. அலறி அடித்து தெருவுக்கு வந்த பொதுமக்கள்.. என்ன நடந்தது?
சேலம் அருகே லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
சேலம்: சேலம் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது நீர்முள்ளிக்குட்டை என்ற பகுதி.. இங்கு நேற்று மாலை திடீரென பெரும் சத்தம் கேட்டுள்ளது..
இந்த பகுதியில் இருக்கும் கடைகள், வீடுகளில் இருந்த கண்ணாடிகளில் ஒருவித அதிர்வு பிரதிபலித்துள்ளது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே அலறி அடித்து ஓடி வந்துள்ளனர்...

அதிர்வு
லேசான நில அதிர்வு ஏற்பட்டதோடு வீடுகளும், லேசாக குலுங்கியதாக தெரிகிறது. வீடுகளுக்குள் திடீரென சத்தம் பயங்கரமாக இருந்ததாக ஒருவருக்கொருவர் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. அதிகாரிகளும் விரைந்து வந்து இது சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணை
பிறகு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய கருவிகளை சோதனையிட்டபோது, அப்படியான நில அதிர்வு எங்கும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. அந்த காட்சிகளிலும் நில அதிர்வு போன்ற அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பது உறுதியானது.. ஆனால், சிசிடிவி கேமராவிலும் லேசான சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது..

சமாதானம்
இதற்கு பிறகுதான், அந்த வழியாக இரண்டு ஜெட் விமானங்கள் பெரும் சப்தத்துடன் பறந்துள்ளது என்றும், அதன் காரணமாகவே இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அப்பகுதி மக்கள் பீதி அடைந்திருப்பதோடு, அதிகாரிகள் நில அதிர்வு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விநோத சத்தம்
இதனால் சேலம் மாநகரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெட் விமானங்கள் எத்தனையோ முறை அந்த பகுதிகளில் பறந்து சென்று வந்திருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு சத்தம் என்றைக்குமே தங்களுக்கு கேட்டதில்லை என்றும், இது ஏதோ வினோதமான சத்தமாக இருந்ததாகவும் பதட்டம் விலகாமல் சொல்கின்றனர் அந்த பகுதி மக்கள்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications