காலாண்டு தேர்வு விடுமுறை.. சொந்த ஊர் செல்ல நல்ல வாய்ப்பு.. கோவை -சென்னை இடையே சிறப்பு ரயில்
சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆயுதபூஜை பண்டிகை வரும் அக்டோபர் 1ம் தேதி வருகிறது. எனவே வரும் 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக வரும் ஞாயிறு அன்று சென்னை கோவை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் முறையே கோவை டூ சென்னை, சென்னை டூ கோவை செல்கிறது. வரும் 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

எனவே கோவையில் இருந்து சென்னை வருபவர்கள், சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் செல்பவர்களுக்கு இந்த ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். இதுபற்றி ரயில்வே வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம். ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06034) வருகிற 28-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 2.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.20 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06033) வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக பிற்பகல் 2.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.35 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்கள் காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு











Click it and Unblock the Notifications