சேலத்தில் ஊரை கூட்டி கிடா (கொரோனா) விருந்து.. 46 பேருக்கு தொற்று.. அடுத்தடுத்து 3 பேர் பலி
சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் கிடா விருந்தில் பங்கேற்றவர்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் பரபரப்பு. ஏற்பட்டுள்ளது. இதனிடையே விருந்தில் பங்கேற்ற 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 15-வது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை உறவினர்களை அழைத்து கிடாவெட்டி விருந்து வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தார். மேலும் அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் 20 வயது பெண் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 65 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்கள் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என தகவல் பரவியது.

இதனால் கிடா விருந்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கிடா விருந்தில் கலந்துகொண்டவர்களை தனிமை படுத்தி கோரோனா பரிசோதனை செய்தனர்.

வீடு வீடாக கிருமி நாசினி தெளித்தனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என சுமார் 200-க்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில் இதுவரை 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் தடுப்பு சுவர்களை அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications