என்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..!
Recommended Video
சேலம்: தமிழகத்திற்கு முதலீடுகளை பெறும் விவகாரத்தில் என்ன சாதித்துவிட்டீர்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார். மேலும், ஏற்கனவே நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு பயனும் ஏற்படவில்லை என்றும், இந்த நிலையில் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கிறோம் எனக் கூறுவதா என வேள்முருகன் வினவினார்.
முதலீடுகளை பெற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். கமல் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும், அவரது செயல் ஏற்கத்தக்கதல்ல எனவும் வேல்முருகன் சாடினார்.
வாகன விற்பனை குறைய இதுவா காரணம்.. பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய திட்டம்? நிதின் கட்கரி விளக்கம்
தமிழகப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் தலைவர்களில் வேல்முருகனும் ஒருவர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல்நலம் சீரானதை அடுத்து கட்சி நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள தொடங்கியிருக்கிறார்.