சேலம் விஜய் கூட்டத்தில் வாலிபர் எப்படி இறந்தார்? போலீஸ் பதிவு செய்த கேஸ் என்ன தெரியுமா?
சேலம்: சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்கள் சந்திப்புக்கு பிறகு கிட்டதட்ட 2 மாதங்கள் கழித்து விஜய் திறந்த வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனால், இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை தவெகவினர் மத்தியில் ஏற்படுத்தியது. மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி தவெகவினர் கூட்டம் நடத்தினர். 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தவெகவினர் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்று போலீசார் கூட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
இருப்பினும் விஜய்யை பார்ப்பதற்காக கூட்டம் நடந்த மைதானத்தின் வெளிப்புறத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். சரியாக மதியம் 12.40 மணிக்கு பேச தொடங்கிய விஜய் 1.10 மணிக்கு தனது பேச்சை முடித்தார். 12 மணி முதல் 3 மணி வரை கூட்டதிற்கு தவெகவினர் அனுமதி கேட்டு இருந்ததால், கடும் வெயிலில் காத்துக்கிடந்தனர்.
அப்போது, கூட்டத்திற்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் (வயது 37) என்பவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்தவுடன் அங்கு இருந்த தவெக நிர்வாகிகள்,அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வாலிபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக தவெக தரப்பிலும் கூறப்பட்டது. அந்த இளைஞருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்பு இருந்ததாகவும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
இந்த நிலையில், சுராஜ் உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்னதானப்பட்டி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். சுரஜ் உடலுக்கு இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
“அன்பு படர்ந்த கொம்பிலே அகந்தை குரங்கு!” மனைவியை துச்சமாக பேசிய விஜயை கிழித்த ப்ளூ சட்டை மாறன் -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
பெண்கள் ஓட்டுக்கு குறி.. மகளிருக்கான தேர்தல் வாக்குறுதியை நாளை வெளியிடும் விஜய்.. தவெக அறிவிப்பு -
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு! -
"சென்னையில் வீடின்றி தவிக்கிறேன்! நீலாங்கரை வீட்டில் வாழ விஜய் தடுக்கிறார்!" சங்கீதா குற்றச்சாட்டு -
சங்கீதாவுக்கு வீட்டில் உரிமை உள்ளது.. தவெகவினர் ஆபாச அவதூறு டூ மச்.. விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் -
நான் சத்தமில்லாமல் விவாகரத்து பெற முயன்றும்! விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்! சங்கீதா குற்றச்சாட்டு -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
சங்கீதா கோர்ட்டுக்கு போயிருக்க கூடாது! இன்னேரம் விஜய் கைதாகியிருப்பார்! எஸ்.வி.சேகர் கருத்து -
"கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”.. சங்கீதா மீண்டும் மனு! -
படத்துலதான் ரீமேக் பண்ணீங்க.. அரசியலிலும் காப்பிதானா? விஜய் வாக்குறுதியை விளாசும் நெட்டிசன்ஸ் -
மகளிருக்கு மாதம் ரூ.2,500.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. தவெக தேர்தல் வாக்குறுதிகள் விஜய் அறிவிப்பு












Click it and Unblock the Notifications