சேலம் விஜய் கூட்டத்தில் வாலிபர் எப்படி இறந்தார்? போலீஸ் பதிவு செய்த கேஸ் என்ன தெரியுமா?
சேலம்: சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்கள் சந்திப்புக்கு பிறகு கிட்டதட்ட 2 மாதங்கள் கழித்து விஜய் திறந்த வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனால், இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை தவெகவினர் மத்தியில் ஏற்படுத்தியது. மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி தவெகவினர் கூட்டம் நடத்தினர். 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தவெகவினர் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்று போலீசார் கூட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
இருப்பினும் விஜய்யை பார்ப்பதற்காக கூட்டம் நடந்த மைதானத்தின் வெளிப்புறத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். சரியாக மதியம் 12.40 மணிக்கு பேச தொடங்கிய விஜய் 1.10 மணிக்கு தனது பேச்சை முடித்தார். 12 மணி முதல் 3 மணி வரை கூட்டதிற்கு தவெகவினர் அனுமதி கேட்டு இருந்ததால், கடும் வெயிலில் காத்துக்கிடந்தனர்.
அப்போது, கூட்டத்திற்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் (வயது 37) என்பவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்தவுடன் அங்கு இருந்த தவெக நிர்வாகிகள்,அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வாலிபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக தவெக தரப்பிலும் கூறப்பட்டது. அந்த இளைஞருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்பு இருந்ததாகவும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
இந்த நிலையில், சுராஜ் உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்னதானப்பட்டி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். சுரஜ் உடலுக்கு இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications