சேலம் எருமாபாளையம் பாழடைந்த பங்களாவில் எல்லாமே அப்படி.. ஆடிப்போன போலீஸ்.. 13 பேர் சுற்றிவளைப்பு
சேலம்: சேலம் எருமாபாளையம் மெயின் ரோடு ஆறுமுகம் நகர் அருகிலுள்ள பாழடைந்த பங்களாவில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிச்சிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சோதனை நடத்திய போலீசார் எருமாபாளையத்தில் பாழடைந்த பங்களாவில், போதை மாத்திரைகள், ஊசிகளை பதுக்கி வைத்திருந்த 13 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சேலம் எருமாபாளையம் மெயின் ரோடு ஆறுமுகம் நகர் அருகிலுள்ள பாழடைந்த பங்களாவில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிச்சிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் உத்தரவிட்டார்.

நேற்று இரவு பங்களாவை சுற்றி வளைத்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த, கிச்சி பாளையத்தைச் சேர்ந்த சண்முகம், சீனிவாசன், முனியப்பன், செட்டியப்பன், சுதர்சன், கிஷோர், கௌஷிக், கௌதம் ராஜ், ஆதிகேசவன், அம்மாபேட்டை சேர்ந்த விக்ரம், அக்பர், சரவணன் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1500 வலி மாத்திரைகள், அவற்றை போதை ஊசிகளாக மாற்றம் செய்து பயன்படுத்தும் சிரஞ்ச் 25, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி வார்டன் சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்ட சிறையில் கைதியை பார்க்க வந்த உறவினரிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய 2 வார்டன்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் தர்மபுரியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த சிறையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்களிடம் சிலர் பணம் வசூலிப்பதாக சிறைத்துறை லஞ்சஒழிப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட சிறையில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் சில தகவல்கள் வெளியானது. இதன்படி, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை பார்ப்பதற்கு அவருடைய சகோதரி சிறைக்கு வந்திருக்கிறார். அப்போது அவரிடம் சிறை வார்டர்கள் திருப்பதி, சவுந்தர்ராஜன் ஆகியோர் ரூ.400 லஞ்சம் வாங்கி இருப்பது சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வார்டர்கள் திருப்பதி, சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து சிறைத்துறை எஸ்பி வினோத் உத்தரவிட்டார். சிறையில் கைதியை பார்க்க வந்த உறவினரிடம் லஞ்சம் பெற்ற 2 வார்டர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறைத்துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications