2 பிரம்படி + சிறை.. கழிவறையில் பாலியல் தொல்லை.. சிங்கப்பூரில் இந்திய நர்ஸ்க்கு என்ன தண்டனை பாருங்க
சிங்கப்பூர்: இந்தியாவை சேர்ந்த 34 வயது நிரம்பியவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். அவர் மருத்துவமனைக்கு வந்த நபருக்கு கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்திய நர்ஸ்க்கு 14 மாதம் சிறை தண்டனையுடன், 2 பிரம்படியை தண்டனையாக வழங்கி உள்ள நிலையில் வழக்கின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல வெளிநாடுகளுக்கும் ஆண்களும், பெண்களும் நர்ஸ் பணி செய்து வருகின்றனர். நம் நாட்டை ஒப்பிடும்போது நர்ஸ் பணிக்கு அதிக சம்பளம் வழங்குவதால் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரிலும் ஏராளமான இந்தியர்கள் நர்ஸாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூரில் நார்த் பிரிட்ஜ் ரோட்டில் ராஃபிள்ஸ் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இந்தியாவை சேர்ந்த எலிப் சிவ நாகு (வயது 34) என்பவர் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் 18 ம் தேதி முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அந்த முதியவரை பார்க்க அவரது பேரன் மருத்துவமனைக்கு வந்தார். அதன்பிறகு இரவு 7.30 மணியளவில் நோயாளி பயன்படுத்தும் கழிவறையை அந்த நபர் பயன்படுத்த சென்றார்.
அப்போது அங்கிருந்த நர்ஸ் எலிப் சிவ நாகு, அந்த நபருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதாவது அந்த நபர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாத்தாவை பார்த்து நலம் விசாரித்த நிலையில் அவரது உடலில் கிருமிகள் தொற்றி இருக்கலாம். இதனால் கிருமி நீக்கம் செய்வதாக கூறி எலிப் சிவ நாகு தனது கையில் சோப்பை எடுத்து அந்த நபருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மருத்துவமனை என்பதால் அந்த நபர் உடனடியாக எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. அதன்பிறகு சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். ஜூன் 23ம் தேதி எலிப் சிவ நாகுவை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தியாவை சேர்ந்த நர்ஸ் எலிப் சிவ நாகுவிற்கு ஓராண்டு 2 மாதம் என மொத்தம் 14 மாதங்கள் சிறை தண்டனை வழங்கியது. அதுமட்டுமின்றி குற்றத்துக்காக 2 பிரம்படியையும் தண்டனையாக வழங்கியது.
சிங்கப்பூரில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தண்டனை பெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் தண்டனை பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த அங்கித் சர்மா என்ற 46 வயது நபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. சாங்கி சிட்டி பாயிண்ட் மாலில் நர்சிங் ரூமில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவர் கைதான நிலையில் கடந்த மாதம் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications