Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலுக்கடியில் மர்மப் பொருள்.. பதற வைத்த 4 மணி நேரம்.. கடலில் மூழ்கிய மலேசிய கப்பல்..

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அருகே மலேசியக் கடற்படைக்குச் சொந்தமான கேடி பென்டேகர் கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். கப்பலில் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு மீட்புக் குழுவினர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து, கடலுக்குள் கப்பல் மெது மெதுவாக மூழ்க ஆரம்பித்தது.

Malaysia

மலேசிய கடற்படைக்குச் சொந்தமானது கே.டி. பென்டேகர் என்ற கடற்படைக் கப்பல். இந்தக் கப்பல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்டு கடற்படைக்கு 1978 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு முதல் இந்தக் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. கே.டி.பென்டேகர் கப்பல் 45 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் அருகே தென்ஜூங் பெனுயுசிப் பகுதியில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் கே.டி. பென்டேகர் கப்பல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கடலுக்கடியில் ஏதோ ஒரு மர்மப் பொருள் இடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், சேதமடைந்த கப்பலுக்குள் நீர் புக ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக கடற்படை தலைமைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். கப்பலில் சேதமடைந்த பகுதியை சீரமைப்பதற்கு மீட்புக் குழுவினர் பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து, கடலுக்குள் கப்பல் மெது மெதுவாக மூழ்க ஆரம்பித்தது.

கப்பல் முழுவதுமாக மூழ்குவதற்குள் கப்பலில் இருந்த 39 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, 4 மணி நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது. கப்பல் மூழ்கியதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, கே.டி.பென்டேகர் கப்பலைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த கப்பல் விபத்து குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கடற்படை கேட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.54 மணிக்கு கப்பல் மூழ்கியுள்ளதாகவும், கப்பல் கடலில் மூழ்கியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், யாரும் அச்சப்படத் தேவையில் என்றும் கடற்படை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+