கொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்
சிங்கப்பூர்: கர்ப்ப காலத்தின்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணுக்கு வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளுடன் குழந்தை பிறந்துள்ளது.
சிங்கப்பூரில் கொரோனாவால் 58,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 29 பேர் பலியாகிவிட்டனர். 58,124 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சிலின் சான் என்பவர் கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார். அப்போது அவர் 10 வார கருவை சுமந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் மூலம் குழந்தைக்கும் கொரோனா பரவல் ஏற்படலாம் என மருத்துவர்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் சிலினுக்கு கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இதையடுத்து குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதையும் அதற்கு பதிலாக குழந்தைக்கு ஏராளமான ஆன்டிபாடிகள் அதாவது வைரஸை எதிர்கொள்ளும் திறன் கொண்ட சக்தி உருவாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் எனக்கு இருந்த கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி போய்விட்டது. ஆனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறையவுள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
அந்த குழந்தைக்கு புரதங்களின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டானதா, இல்லை தாயிடம் இருந்து கிடைத்ததா இல்லை, குழந்தையே உருவாக்கியதா என தெரியவில்லை, மேலும் கொரோனா பாதிப்பு இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் குழந்தைக்கும் பாதிக்குமா இல்லையா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications