மருது பாண்டியர் குருபூஜை விழா.. சிவகங்கையில் 6 தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சிவகங்கை: மருது பாண்டியர் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று(அக்.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் 221வது குருபூஜை விழாவில் அரசியல் தலைவர்கள் பலர் மருது சகோதரர்களின் சிலைக்கு மரியாதை செய்கின்றனர்.

சுதந்திர போராட்டம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியபோது இவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் ஆளாகினர். மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் இதனை முறியடித்தனர்.

குருபூஜை
பின்னர் 1801ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி சிவகங்கையின் திருப்பத்தூரில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாக காளையார் கோயில் கட்டப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் அக்.27ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த அரசியல் தலைவர்கள் பலர் வர உள்ளதால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு
அரசு சார்பில் இந்த குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்நிகழ்வில் கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என 6 அமைச்சர்கள் பங்கேற்று மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதேபோல பாதுகாப்பு அம்சங்களை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். குருபூஜையையொட்டி காளையார் கோவிலுக்கு வரும் கார்கள் கண்காணிக்கப்படும் என்றும், கொண்டாட்டம் என்கிற பெயரில் கார்கள் மீதேறி பயணிப்பது, தொங்கிக்கொண்டு பயணிப்பது என விதி மீறல்களில் ஈடுபட்டால் கார் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

நடவடிக்கை
இது தோடர்பாக பேட்டியளித்த மதுரை எஸ்பி சிவபிரசாத், கடந்த 11ம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று விதி மீறல்களில் ஈடுபட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 31 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 25 நான்கு சக்கர வானங்கள் மற்றும் 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல மருது பாண்டியர் குருபூஜை விழாவிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.

144 தடை
இது ஒருபுறம் இருக்க சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை என 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications