திடீர் திருப்பம்.. கார்த்தி சிதம்பரத்துடன் சுதர்சன நாச்சியப்பன் சந்திப்பு.. ஆதரவு அளிக்க முடிவு!
காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
Recommended Video
காரைக்குடி: காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர் பாஜக தேசிய செயலாளர் வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
அவர் நம்பர் 3.. இவர் நம்பர் 2.. நம்பர் 1 யார் தெரியுமா? அதிமுகவினருக்கு ரேங்க் போட்ட ஸ்டாலின்!
என்ன பேட்டி
சுதர்சன நாச்சியப்பன் நேற்று அளித்த பேட்டியில், கார்த்தி சிதம்பரம் வேட்பாளர் என்பது பொதுமக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எதையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு.
வெறுப்பு
இந்த குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள் என சுதர்சன நாச்சியப்பன் கூறினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தலைமையின் முடிவை பொதுவில் விமர்சிக்க கூடாது என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தார்.
திருப்பம்
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துடன் சந்திப்பு நடத்தி உள்ளார். காரைக்குடியில் இருவரும் சந்திப்பு நடத்தினர். இவர்கள் சுமார் 20 நிமிடம் ஒன்றாக இருந்து பேசினார்கள்.
ஆதரவு அளிக்கிறார்
காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக்கு ஆதரவு அளிப்பதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு இருவரும் சேர்ந்து உழைப்போம். காங்கிரஸ் வெற்றிபெறுவதே எங்களுக்கு முக்கியம் என்று சுதர்சன நாச்சியப்பன் பேட்டியளித்து இருக்கிறார்.