'யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்'.. 125 கிடாக்களுடன் நெகிழவைத்த குல தெய்வ வழிபாடு
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒரு கிராமத்தில் குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ., நடந்தே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
குல தெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்களின் வழிபாட்டு முறையாகும். எங்கே இருந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும் குல தெய்வ வழிபாட்டிற்காக ஒவ்வொரு வருடமும் மக்கள் ஒற்றுமையாக வருவார்கள். ஒவ்வொரு கோடைக்காலத்தின் போதும், குலதெய்வ வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடக்கும்.

மாசி மாதம் தொடங்கி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் குலதெய்வ வழிபாடுகள் அதிகமாக நடக்கும். மக்கள் விரதம் இருந்து, தங்கள் குலதெய்வங்களை சொந்த பந்தங்களுடன் சென்று வழிபடுவார்கள்.
இந்த குலதெய்வ வழிபாடுகள், உறவுகளின் வலிமையையும், பாசத்தையும், அன்பையும், தெய்வ பக்தியையும் மக்களிடையே வளர்க்கும். நேற்று சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குலத்தெய்வ வழிபாட்டுக்காக 125 கிடாக்களுடன் கிராம மக்கள் 10 கி.மீ., நடந்தே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சிவகங்கை அருகேயுள்ள பெருமாள்பட்டி, இலுப்பக்குடி கிராமங்களைச் சேர்ந்த 65 பங்காளிகள், நரியனேந்தலில் உள்ள முத்தையா கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலத்தெய்வ வழிபாடு நடத்துவார்கள். கொரோனாவால் 5 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்று சாமி கும்பிடச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
கிராம மக்கள் பலர் 125 கிடாக்களுடன் 10 கி.மீ., தூரம் கோயிலுக்கு நடந்தே சென்றார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்ற அவர்களின் பின்னால் 65 சரக்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. நேற்றிரவு கோயிலை அடைந்த அவர்கள், இன்று (ஜூன் 9) காலை கோழிகளை பலியிட்டு வழிபாட்டை தொடங்க உள்ளார்கள்.
வரும் ஜூன் 10-ம் தேதி கொண்டு போன கிடாக்களை வெட்டி வழிபாடு நடத்துகிறார்கள் ஜூன் 11-ம் தேதி மீண்டும் கிடா வெட்டி படையலிடுகின்றனர். பின்னர் அன்று மாலை வாகனங்களில் ஊருக்கு திரும்புகிறார்கள்
இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, கடந்த காலங்களில் குழந்தைகள், சாமான்களை ஏற்றிச் செல்ல மாட்டு வண்டிகளை பயன்படுத்தினோம். தற்போது சரக்கு வாகனங்களை பயன்படுத்துகிறோம். கொரோனா பிரச்சனை 5 ஆண்டுகளுக்கு பின்னர் சாமி கும்பிடுகிறோம். மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்து வழிபடுவோம் என்றார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications