கொள்கைகளை வெளியே சொன்னால் காப்பி அடிச்சுடுவாங்களே.. சொன்னது கமல்ஹாசன்
சிவகாசி: தமது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியே சொன்னால் அதை சிலர் காப்பி அடித்துவிடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்ன் கூறியுள்ளார்.
தென் தமிழகத்தில் கமல்ஹாசன் தொடர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களையும் கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், தான் எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன். அதனால் தனக்கு எம்ஜிஆரை கொண்டாடுவதற்கு உரிமை உள்ளது என்றார். மேலும் கூவம் நதியை தூய்மைப்படுத்தும் விவகாரத்தையும் எடுத்து சொன்னார்.
மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியில், மிட்டாய் இனிமையை கோவில்பட்டி காற்றில் உணர்ந்தேன்- கமல் ட்வீட்
அத்துடன் தமது கட்சியின் கொள்கைகள் என்ன என்பது வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி அடித்துவிடுவார்கள். அதனால் அதனை நாங்கள் சொல்லமாட்டோம் என கூறியிருக்கிறார்.
Comments
tamil nadu assembly election 2021 mnm kamal haasan தமிழக சட்டசபை தேர்தல் 2021 கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் politics
English summary
MNM President Kamal Haasan said that he will not speak on his party ideologies openly.
Story first published: Tuesday, December 15, 2020, 23:38 [IST]