Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’கருப்பு வியாழன்’ ஏப்ரல் 30 செவுரு..ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான்! ஒரே நாளில் வீழ்ந்த லெஜண்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 30ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது. சிஎஸ்கே, தோனியின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்து விட்டது போல பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால் அதே நாளில் உலகில் பிரபலமான லெஜெண்ட் வீரர்கள் பலரும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான் என நான்கு முக்கிய ஜாம்பவான்கள் நான்கு தொடர்களில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அதனை கருப்பு வியாழன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

2025 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ருதுராஜ் தலைமையில் மஞ்சள் படை களம் இறங்கியது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொண்டாடி தீர்த்தனர்.

ஆனால் போகப் போக அணியின் நிலைமை தலைகீழாக மாறியது. பேட்டிங், பில்டிங், பௌலிங் என அனைத்து துறைகளிலும் மூத்த வீரர்கள் சொதப்ப, கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. நடப்பு தொடரில் 10 போட்டியில் இதுவரை இரண்டு வெற்றியை மட்டுமே பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

IPL 2025 Dhoni Messi

ஐபிஎல் 2025

ஜடேஜா, ருதுராஜ் என தலைமை ஏற்றவர்கள் சொதப்ப, மீண்டும் கேப்டன் பதவியேற்ற தோனியால் கூட சென்னை அணியை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் கதையும் தோனியின் கதையும் முடிந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் உலகில் பல பகுதிகளில் நடந்த கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் உலகின் பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முக்கிய வீரர்களும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். அதனால் அந்த நாளை கருப்பு வியாழன் என்கின்றனர் ரசிகர்கள்.

IPL 2025 Dhoni Messi

ரொனால்டோ

சவுதி அல்நசர் அணி, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ஜப்பானின் காவசாக்கி ஃப்ரண்டேல் அணியிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ரொனால்டோ போட்டியின் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய கோல் அடிக்கும் வாய்ப்பை வீணாக்கினார். அதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த சீசனில் எந்த கோப்பையும் வெல்ல முடியாமல் போனது, ரொனால்டோவுக்கும் அல்நசருக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

IPL 2025 Dhoni Messi

தோனி

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த சீசனில் பிளேஆஃப் போட்டிகளுக்கு முன்னரே வெளியேறியது. தோனி மீண்டும் கேப்டனாக இருந்தும், அணியின் சரிவு தொடர்ந்தது. 10 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.

IPL 2025 Dhoni Messi

மெஸ்ஸி

இன்டர் மியாமி அணி, கான்காகாஃப் சாம்பியன்ஸ் கப்பின் அரையிறுதியில் வென்கூவர் அணியிடம் 3-1 என்ற தோல்வியடைந்தது. மொத்தமாக 5-1 என்ற கணக்கில் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது. மெஸ்ஸி ஒரு அட்டகாச பாஸ் கொடுத்தும், அடுத்தபடியாக அவரிடம் இருந்து சிறப்பு திறமைகள் தெரியவில்லை. வயது மூப்பும், நம்பிக்கை இல்லாத டீம் பிளேவும் மியாமியின் தோல்விக்கு காரணமாக காணப்படுகின்றன.

IPL 2025 Dhoni Messi
லெப்ரான்

என்பிஏ பிளேஆஃப்பில் லேக்கர்ஸ் அணி, மின்னசோட்டாவிடம் 103-96 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் 50 வெற்றிகள் இருந்தும், முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் லெப்ரானுக்கு மகன் பிரான்னியுடன் ஒரே மைதானத்தில் விளையாடிய மகிழ்ச்சி கிடைத்தது சற்று தோல்வியை கொஞ்சம் ஆறுதலாக மாற்றியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+