’கருப்பு வியாழன்’ ஏப்ரல் 30 செவுரு..ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான்! ஒரே நாளில் வீழ்ந்த லெஜண்டுகள்!
சென்னை: ஏப்ரல் 30ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது. சிஎஸ்கே, தோனியின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்து விட்டது போல பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஆனால் அதே நாளில் உலகில் பிரபலமான லெஜெண்ட் வீரர்கள் பலரும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். ரொனால்டோ, மெஸ்ஸி, தோனி, லெப்ரான் என நான்கு முக்கிய ஜாம்பவான்கள் நான்கு தொடர்களில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இதனால் அதனை கருப்பு வியாழன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ருதுராஜ் தலைமையில் மஞ்சள் படை களம் இறங்கியது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொண்டாடி தீர்த்தனர்.
ஆனால் போகப் போக அணியின் நிலைமை தலைகீழாக மாறியது. பேட்டிங், பில்டிங், பௌலிங் என அனைத்து துறைகளிலும் மூத்த வீரர்கள் சொதப்ப, கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. நடப்பு தொடரில் 10 போட்டியில் இதுவரை இரண்டு வெற்றியை மட்டுமே பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது.

ஐபிஎல் 2025
ஜடேஜா, ருதுராஜ் என தலைமை ஏற்றவர்கள் சொதப்ப, மீண்டும் கேப்டன் பதவியேற்ற தோனியால் கூட சென்னை அணியை காப்பாற்ற முடியவில்லை. தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்க்ஸ் கதையும் தோனியின் கதையும் முடிந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் உலகில் பல பகுதிகளில் நடந்த கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் உலகின் பெரும் அளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முக்கிய வீரர்களும் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர். அதனால் அந்த நாளை கருப்பு வியாழன் என்கின்றனர் ரசிகர்கள்.

ரொனால்டோ
சவுதி அல்நசர் அணி, ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் ஜப்பானின் காவசாக்கி ஃப்ரண்டேல் அணியிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ரொனால்டோ போட்டியின் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய கோல் அடிக்கும் வாய்ப்பை வீணாக்கினார். அதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்த சீசனில் எந்த கோப்பையும் வெல்ல முடியாமல் போனது, ரொனால்டோவுக்கும் அல்நசருக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தோனி
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இந்த சீசனில் பிளேஆஃப் போட்டிகளுக்கு முன்னரே வெளியேறியது. தோனி மீண்டும் கேப்டனாக இருந்தும், அணியின் சரிவு தொடர்ந்தது. 10 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுகிறது.

மெஸ்ஸி
இன்டர் மியாமி அணி, கான்காகாஃப் சாம்பியன்ஸ் கப்பின் அரையிறுதியில் வென்கூவர் அணியிடம் 3-1 என்ற தோல்வியடைந்தது. மொத்தமாக 5-1 என்ற கணக்கில் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது. மெஸ்ஸி ஒரு அட்டகாச பாஸ் கொடுத்தும், அடுத்தபடியாக அவரிடம் இருந்து சிறப்பு திறமைகள் தெரியவில்லை. வயது மூப்பும், நம்பிக்கை இல்லாத டீம் பிளேவும் மியாமியின் தோல்விக்கு காரணமாக காணப்படுகின்றன.

லெப்ரான்
என்பிஏ பிளேஆஃப்பில் லேக்கர்ஸ் அணி, மின்னசோட்டாவிடம் 103-96 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சீசனில் 50 வெற்றிகள் இருந்தும், முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால் லெப்ரானுக்கு மகன் பிரான்னியுடன் ஒரே மைதானத்தில் விளையாடிய மகிழ்ச்சி கிடைத்தது சற்று தோல்வியை கொஞ்சம் ஆறுதலாக மாற்றியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications