சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்பாக.. இந்திய அணி உறுப்பினருக்கு நேர்ந்த சோக நிகழ்வு!
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக பணியாற்றி வரும் ஆர். தேவ்ராஜ், அவரது தாயார் காலமானதால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நடுவிலேயே அணியை விட்டு வெளியேறினார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) செயலராக உள்ள தேவ்ராஜ், தற்போது துபாய் நகரில் இந்திய அணியுடன் இருந்தார். எனினும், அவர் மீண்டும் இந்த தொடரில், மேலாளராக பணியாற்றுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தியா செவ்வாய்க்கிழமை முதல் அரையிறுதிப் போட்டியில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்தால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், தேவ்ராஜின் தாயார் கமலேஷ்வரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
"எங்கள் செயலர் தேவ்ராஜ் தாயார் காலமான செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய எங்கள் இரங்கல்கள். தேவ்ராஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிரோபி இறுதி லீக் போட்டியில் இந்தியா 249/9 என சுமாரான ஸ்கோர்தான் பதிவு செய்தது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் (79) சிறப்பாக ஆடினார், அதோடு ஹார்திக் பாண்டியாவின் அதிரடி (45, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) அணிக்கு பெரிதும் உதவியது.
நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்ரி, 8 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறிய நிலையில், 30/3 என்ற ஸ்கோரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் (42) ஜோடி 98 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டெடுத்தனர். பிறகு நியூசிலாந்து அணியை சிறப்பான சுழல் பந்து வீச்சால் கட்டுப்படுத்தி வென்றது இந்தியா.
இந்த போட்டியின் வெற்றியாளரான இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் விளையாட வேண்டும். இந்தியா அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், துபாயில் செவ்வாய்க்கிழமை முதல் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications