அகீல் ஹொசைன், ஓவர்டன், குர்ஜப்னீத் சிங்.. சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் கட்டாயம்.. செய்வாரா ருதுராஜ்?
பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் அகீல் ஹொசைன், ஜேமி ஓவர்டன் மற்றும் குர்ஜப்னீத் சிங் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அகீல் ஹொசைனால் எளிதாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, நூர் அஹ்மத் கொஞ்சம் ஃபார்முக்கு வந்தால் சின்னசாமி மைதானத்தில் மேஜிக் நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு நேர போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக பிரசாந்த் வீர் இடத்தில் அகீல் ஹொசைன் சேர்க்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ராகுல் சஹருக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக குர்ஜப்னீத் சிங் சேர்க்க வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்னீத் சிங் பெங்களூர் மைதானத்தில் நிச்சயம் பயன் அளிப்பார் என்று பேசத் தொடங்கியுள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை டிவால்ட் பிரெவிஸ் பேட்டிங் மட்டும் ஆட தயாராகிவிட்டால், கார்த்திக் சர்மாவின் இடத்தில் அவரை விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கார்த்திக் சர்மாவுக்கு இரு வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அவர் சிறப்பாக ஆடவில்லை.
கடந்த போட்டியில் நூர் அஹ்மத் மற்றும் மேட் ஹென்ரி மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் பிரெவிஸ் மற்றும் ஓவர்டன் ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. மேட் ஹென்ரியை நீக்கிவிட்டு அவரது இடத்தில் குர்ஜப்னீத் சிங்கை கொண்டு வர வேண்டும்.
இதன் மூலமாக சிஎஸ்கே அணி 8 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்கள் என்று களமிறங்க முடியும். அதேபோல் பிரெவிஸ் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரையும் வைத்து மிடில் ஆர்டரை வலுப்படுத்த முடியும். இந்தப் போட்டியில் மட்டும் சிஎஸ்கே அணி வென்றுவிட்டால், எளிதாக வெற்றிக்கான ஃபார்முலாவை கண்டுபிடிக்க முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications