ஆன்ட்ரே ரசலை கைவிடும் கேகேஆர்.. டிரேடிங்கில் வாங்க முன்வரும் நட்சத்திர அணிகள்.. என்ன நடக்குது?
மும்பை: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் ஆன்ட்ரே ரசலை விடுவிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா அணிக்காக 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ரே ரசலின் செயல்பாடுகள் கொல்கத்தா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்தில் களமிறங்கும் ரிங்கு சிங் அபாரமாக செயல்பட்டு வருவதால், மாற்று வீரர்களை தேர்வு செய்ய கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடனான ஆன்ட்ரே ரசலின் உறவு முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரை கொல்கத்தா அணி விடுவிப்பதற்கு முன்பாக டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய பல்வேறு அணிகள் முயன்று வருகின்றன. இன்னும் 2 நாட்களே இருப்பதால், கொல்கத்தா அணியிடம் இருந்து ஆன்ட்ரே ரசலை ஒப்பந்தம் செய்ய மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முயற்சித்து வருகின்றன.
ஏற்கனவே லக்னோ அணியிடம் இருந்து ஆவேஷ் கானை பெற்றுக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணி, மிடில் ஆர்சரில் ஹெட்மயருக்கு இணையாக மற்றொரு வீரரை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஃபினிஷர் ரோலில் களமிறங்க கூடிய வீரராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகிகள் பார்த்து வருகின்றனர்.
இதனால் மினி ஏலத்தில் பேட் கம்மின்ஸ், கோட்சியே உள்ளிட்ட வீரர்களை வாங்க முயன்று வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் ஆன்ட்ரே ரசலை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரை டிரேடிங் வாங்க ராஜஸ்தான் அணி முயற்சித்து வருகிறது. ராஜஸ்தான் அணியின் பிட்சில் ரசலின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே எடுபடும் என்பதால், அந்த அணி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.
அதேபோல் இன்னொரு பக்கம் மும்பை அணி ஆன்ட்ரே ரசலை டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை மும்பை அணியில் கொண்டு வரும் பட்சத்தில் பொல்லார்ட் இடத்தை எளிதாக நிரப்ப முடியும். அதுமட்டுமல்லாமல் மும்பை பிட்சில் ரசல் சிறப்பாகவே விளையாடுவார். இதனால் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் ரசலை ஒப்பந்தம் செய்ய போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications