வந்தே பாரத் ரயில் மூலம் பத்திரமாக டெல்லி வந்த ஐபிஎல் வீரர்கள்.. ஒரு வாரத்துக்கு போட்டிகள் சஸ்பெண்ட்!
டெல்லி: மே 8 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி பாகிஸ்தானின் தாக்குதல்களால் கைவிடப்பட்டதை அடுத்து, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் வீரர்கள் தர்மசாலாவிலிருந்து டெல்லிக்கு வந்தனர். அவர்கள் சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததை பொறுக்க மாட்டாமல் ஆத்திரத்தில் இந்தியா மீது டிரோன் தாக்குதலை ஏவி வருகிறது பாகிஸ்தான். அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையே, ஹிமாசலின் தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் -தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி நேற்று (மே 8) பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 11வது ஓவரில் ஆட்டம் கைவிடப்பட்டது
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக மைதானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இரு அணி வீரர்களும், ஸ்டேடியத்தில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் அனைவரும் டெல்லியை வந்தடைந்துள்ளனர்.
போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications