கார்த்திக் சர்மா அல்லது உர்வில் படேல்? சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே இடத்தில் யாருக்கு வாய்ப்பு?
மும்பை: சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனால் ஆயுஷ் மாத்ரேவின் இடத்தில் உர்வில் படேல் அல்லது கார்த்திக் சர்மா ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியின் போது, சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, இடது காலின் தொடைப் பகுதியில் (Left Hamstring) காயமடைந்தார். வேகமாக ரன்கள் ஓட முயன்றபோது ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவர் வலியால் துடித்தார்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் 6 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது சிஎஸ்கே நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் 6 போட்டிகளில் ஆடிய ஆயுஷ் மாத்ரே, 201 ரன்களை குவித்திருந்தார்.
இதனால் ஆயுஷ் மாத்ரேவின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடத்தில் விளையாட சிஎஸ்கே அணி நிர்வாகிகள் 2 வீரர்களில் யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய இருவருமே நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடக் கூடியவர்கள்.
கடந்த ஐபிஎல் 2025 சீசனில், இவர் காயம் காரணமாக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 3 போட்டிகளில் 68 ரன்களை மிக அதிரடியாக 212.5 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அசத்தினார். பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். ஆயுஷ் மாத்ரே ஆடிய அதே பாணியிலான ஆட்டத்தை இவரால் வெளிப்படுத்த முடியும்.
அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தின் போது 14.5 கோடி ரூபாய் என்ற பெரிய தொகைக்கு ஏலம் எடுத்த வீரர் கார்த்திக் சர்மா. இவர் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 25 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திறமையான வீரர் என்பதால், டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications