பதற்றம் தந்த பாடி லாங்குவேஜ்! நேற்று மேட்சில் கவனிச்சீங்களா? இந்திய அணியில் பெரிய ஷாக்!சரியில்லையே
சென்னை: நேற்று நேபாளத்திற்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி வென்றாலும் கூட ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை உலகக் கோப்பையில் எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மேட்ச் கண்டியில் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக முடிவு வராமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
17 பேர் கொண்ட அணி: ஏற்கனவே இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று நேபாளத்திற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்தனர். சிராஜ் 3 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது.
விக்கெட் இழக்காமல் ரோஹித் சர்மா 74, சுப்மான் கில் 67 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20.1 ஓவரில் 147-0 ரன்கள் எடுத்து வென்றது. மழை காரணமான ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி வென்றது.

குழப்பம்: நேற்று இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை மிஸ் செய்தனர். அழகாக கைக்கு வந்த கேட்சை கோலி உட்பட மிஸ் செய்தனர். பீல்டிங் செய்யவே தெரியாத வீரர்கள் மைதானத்தில் நிற்பது போல மோசமாக ஆடிக்கொண்டு இருந்தனர்.
அதன்பின் இந்திய அணியின் பாடி லாங்குவேஜும் மோசமாக இருந்தது. ஆட்டத்தின் மீது ஆர்வமே இல்லாமல் மிதப்பில் இருந்தது போல் ஆடிக்கொண்டு இருந்தனர். அதாவது எதோ இந்த தொடரில் ஏற்கனவே வென்றுவிட்டது போல ஆடிக்கொண்டு இருந்தனர். இந்திய அணியின் இந்த மிதப்பான ஆட்டம் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications