விடுதலைப் புலிகளுடன் சமாதானத்தையே விரும்பினேன்: சொல்கிறார் சந்திரிகா
Subscribe to Oneindia Tamil

பெங்களூருவில் 6 வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சந்திரிகா பேசியதாவது:
விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தேன். எனது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளை திறந்தேன்.
இலங்கையில் போர் காலத்தின் போது சமாதானமும், அதே நேரம் போர் பாதிக்கப்பட்ட இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துகொண்டேன்.
தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்சே அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
இவ்வாறு சந்திரிகா பேசினார்.












Click it and Unblock the Notifications