யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை.. பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ் வேட்பாளர்கள்!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் அனுர குமார திசநாய்யக்கவின் ஜேவிபி கட்சியின் வேட்பாளர்கள் அதிகளவிலான வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருன்றனர். தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
இலங்கையில் நேற்று நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதிகளிலும், அதிபர் அனுர குமார திசநாய்யக்கவின் ஜேவிபி கட்சி இடம்பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆறு இடங்களுக்கு போட்டி நிலவுகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களும், ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய், சாவச்சேரி, நல்லூர் என்று பல பிரதேசங்களில் ஜேவிபி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மானிப்பாய் மற்றும் சாவச்சேரி ஆகிய இடங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டை எனக் கூறப்படுவது உண்டு. அங்கு, அனுரவின் ஜேவிபி கட்சி பின்தங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், வாக்கு எண்ணிக்கையில் அங்கும் ஜேவிபி கட்சி முன்னிலை வகிக்கிறது. சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) அங்கு இரண்டாம் இடத்தில் உள்ளது.
யாழ்ப்பாணம் டிவிஷன் வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி 41.46% வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி 11.81% வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ் மாவட்டம் - யாழ்ப்பாணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,066 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 1,124 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மாற்றத்தை விரும்பும் இளம் தலைமுறையினர் மற்றும் பாரம்பரிய தமிழ் அரசியலில் ஏமாற்றம் அல்லது சலிப்படைந்த மக்கள், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழக்கி பார்க்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி,
தேசிய மக்கள் சக்தி (NPP) 4,64,916 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 75,248
புதிய ஜனநாயக முன்னனி (NDF) 29,020
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 23,235 வாக்குகளை பெற்றுள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையில், கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications