For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு போலீஸ் சம்மன்! ஜூன் 12-ல் ஆஜராக உத்தரவு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்நாட்டு புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நமல் ராஜபக்சே வரும் 12-ந் தேதி நேரில் ஆஜராக சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து மைத்ரிபால சிறிசேன புதிய அதிபரானார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ராஜபக்சே ஆட்சிக் கால ஊழல்கள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

Rajapaksa son Namal summoned by CID

ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். கோத்தபாய ராஜபக்சே எந்த நேரத்திலும் சிறையில் அடைக்கப்படலாம். அதேபோல் ராஜபக்சே மனைவி ஷிராந்தி மீதும் நிதி மோசடி புகார் கூறப்பட்டு அவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபக்சேவை ஆஜராகுமாறு அந்நாட்டு சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 12-ந் தேதி நமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நமல் ராஜபக்சே, எதற்காக தமக்கு சம்மன் அனுப்பப்பட்டு எனத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Srilanka Former President Mahinda Rajapaksa’s eldest son, MP Namal Rajapaksa had been summoned to appear at the CID on June 12 to record a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X