சிறுமிகள் பலாத்கார சம்பவங்களுக்கு கண்டனம்: இலங்கையில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம்
கொழும்பில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்தியாவில் சிறுமிகள் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கண்டன போராட்டம் இன்று நடைபெற்றது.
காஷ்மீர், உ.பி, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க சட்ட திருத்தம் கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக சிறுமிகள் பலாத்கார சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இதில் சமூக ஆர்வலர்கள், இந்திய முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications