இந்திய பெருங்கடலில் நுழைகிறது சீனா.. இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு வாங்கியது
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு அளித்தது இலங்கை.
கொழும்பு : இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது.
இரு இலங்கை நிறுவனங்களாக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் ஆகியவற்றை சீன வியாபாரிகள் துறைமுக நிறுவனம் நிர்வகித்து வந்தது.

இலங்கை துறைமுக ஆணையத்துக்கு சொந்தமான துறைமுகத்தில் முதலீட்டு மண்டலங்கள் ஏராளமாக உள்ளன. கடந்த ஏப்ரலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது முன்னாள் அதிபர் ராஜபட்சேவால் அவரது சொந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சீன உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கு பரிமாற்றங்களுக்கு விக்ரமசிங்கே ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விக்ரமசிங்கே பேசுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நாம் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த தொடங்கிவிட்டோம்.
இந்திய பெருங்கடலில் அம்பாந்தோட்டை முக்கிய துறைமுகமாக மாற்றப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பொருளாதார மண்டலமும் தொழில்மயமாக்கலும் அந்த பகுதியில் நடைபெறும் என்றார் அவர்.
99 ஆண்டுகளுக்கு குத்தகை பணமாக சீனாவிடம் இருந்து இலங்கை 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலில் பெற்றுக் கொண்டுவிட்டது. இதைத் தான் எதிர்க்கட்சிகள் துறைமுகத்தையே சீனாவுக்கு விற்றுவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications