நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவிப்பு.. இலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலை
Recommended Video

கொழும்பு: இலங்கை, நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இன்று பகல் 12 மணியிலிருந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் நவம்பர் 16ஆம் தேதி தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ இலங்கையில் அவசரநிலை போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவை திடீரென நேற்று பிரதமராக அறிவித்த அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து, விலக்குவதாக அறிவித்தார்.
[ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா?, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்!]
ஆனால் இதை ரணில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தனக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும், அதிபருக்கு தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை, இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறும், அதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கே அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத்தை முடக்குவதாக, சிறிசேன அறிவித்துள்ளார். இதன்மூலம், பெரும்பான்மை ஆதரவு ராஜபக்சே மற்றும் சிறிசேனாவுக்கு இல்லை என்பது அம்பலமாகி உள்ளது. எனவேதான், எமர்ஜென்சி போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளார் சிறிசேனா.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications