நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவிப்பு.. இலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலை
Recommended Video

கொழும்பு: இலங்கை, நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இன்று பகல் 12 மணியிலிருந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் நவம்பர் 16ஆம் தேதி தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ இலங்கையில் அவசரநிலை போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவை திடீரென நேற்று பிரதமராக அறிவித்த அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து, விலக்குவதாக அறிவித்தார்.
[ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா?, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்!]
ஆனால் இதை ரணில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தனக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும், அதிபருக்கு தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை, இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறும், அதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கே அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத்தை முடக்குவதாக, சிறிசேன அறிவித்துள்ளார். இதன்மூலம், பெரும்பான்மை ஆதரவு ராஜபக்சே மற்றும் சிறிசேனாவுக்கு இல்லை என்பது அம்பலமாகி உள்ளது. எனவேதான், எமர்ஜென்சி போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளார் சிறிசேனா.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications