இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்?.. யார் அந்த ''01'' குழு?.. இலங்கை அரசு புதிய விளக்கம்!
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி உள்ளது.
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி உள்ளது.
இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

யாரும் இல்லை
ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து 35 மணி நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன பின்புலம்
அதேபோல் இலங்கை அதிகாரிகளும் இது தொடர்பாக பெரிய அளவில் ரகசியம் காத்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று பேட்டியளித்த இலங்கை அமைச்சர்கள் எல்லோரும் ''01'' குழு நடத்திய தாக்குதல் என்றே குறிப்பிட்டார்கள். அதாவது குழுவின் பெயரை குறிப்பிடாமல், எந்த விதமான அடையாளமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

பலர் சந்தேகம்
இவர்கள் யாரை 01 குழு என்று குறிப்பிடுகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கை அமைச்சரவையின் செய்தி தொடர்பாளர் ரஜிதா இது தொடர்பாக அளித்த பேட்டியில், இதை உள்ளூர் ஆட்கள் செய்தது போல தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த நபர்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்டு நடத்த முடியாது. இது வெளியில் இருந்து யாரோ நடத்திய தாக்குதல்.

சதி
இதற்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக தோன்றுகிறது. இது தொடர்பாக எங்கள் நட்பு நாடுகளிடம் உதவி கேட்டு இருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு நபர்கள் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்வோம். விரைவில் உண்மைகள் வெளியே வரும் என்று அவர் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications