இலங்கை வெளியுறவு அமைச்சர் பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன்சிங் குறித்து வதந்தி
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பொய்யான தகவல் பதிவிட்டது சர்ச்சையாகிவிட்டது.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து வதந்தி கிளப்பிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகிவிட்டதாக ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தகவலை பலரும் பகிர்ந்து கொள்ளவும் தொடங்கினர். ஆனால் இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே இல்லை என அதிரடியாக மறுத்தார்.
அத்துடன் இந்த போலி ட்விட்டர் பக்கம் தொடர்பாக போலீசாரிடமும் அவர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் ரவி கருணாநாயக்க விளக்கம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications