உள்ளாட்சி இடைத்தேர்தல்: 1,589 அ.தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு -1,486 இடங்களுக்கு 16ல் தேர்தல்
கோவை: தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, 8 நகராட்சி தலைவர் பதவி உள்பட காலியாக உள்ள 3,075 உள்ளாட்சி பதவி இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் மட்டும் தேர்தலை சந்திக்கின்றன. வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
மறுநாள் (5-ஆம்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 8-ஆம் தேதி மனுக்கள் வாபஸ் நடந்தது.

நெல்லை மேயர் தேர்வு
இதில் நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த வெள்ளையம்மாள் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 நகரசபை பதவிகள்
மேலும் 8 நகரசபை தலைவர் பதவிகளில் சங்கரன்கோவில், கொடைக்கானல், புதுக்கோட்டை, குன்னூர் ஆகிய 4 இடங்களில் அ.தி. மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 7 பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1589 பதவிகளுக்கு அதிமுகவினர்
இதேபோல் 12 மாநகராட்சி வார்டுகளில் 4 பேரும், 53 நகராட்சி வார்டுகளில் 30 பேரும், 106 பேரூராட்சி வார்டுகளில் 64 பேரும், 11 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 4 பேரும், 82 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 48 பேரும், 141 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் 49 பேரும், 1,707 கிராம பஞ்சாயத்து வார்டுகளில் 1,384 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். மொத்தம் 1,589 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கவுன்சிலர்கள்
சென்னையில் தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாகூர்கனி, கோமளா ஆகியோர் கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.கணேசன் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பொழிச்சலூர் ஊராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஆறுமுகம், முடிச்சூர் ஊராட்சி 4-வது வார்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா பிள்ளை ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.

1486 பதவிகளுக்கு தேர்தல்
மீதம் உள்ள 2 மாநகராட்சி மேயர், 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 1,486 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications