இந்தியா - பாக். மோதலைப் பயன்படுத்தி வீடு புகுந்து 15 பவுன் நகைகளை திருடிய கொள்ளையன்!
சென்னை: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்ததைப் பயன்படுத்தி பட்டப் பகலில் வீடு புகுந்த ஒரு திருடன், சென்னையில் 15 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தை இரு நாட்டு மக்களும், வேலைகளைப் போட்டு விட்டு பார்த்து ரசித்தனர். பெரும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி நடந்த தினமான ஞாயிற்றுக்கிழமையன்று, சென்னையில் சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. மால்கள், தியேட்டர்கள், மெரீனா கடற்கரை என எங்கு பார்த்தாலும் வெறிச்சோடிப் போயிருந்தது. மக்கள் டிவி பெட்டிகள் முன்பு முடங்கிப் போய்க் கிடந்தனர்.

கே.கே. நகர் நடேசன் நகரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரான வத்சன் என்பவரும் தனது வீட்டில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார். காற்றோட்டமாக இருப்பதற்கு வசதியாக காலை முதல் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்தார். பின்னர் டிவியில் கிரிக்கெட் போட்டியை ரசித்தார். கடைசி கட்ட ஓவர்களில் இந்த போட்டி மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருந்தது.
போட்டி முடிந்த பின்னர் எழுந்து அறைக்குள் சென்ற வத்சன், அங்கிருந்த பீரோ திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளைக் காணவில்லை. இவர் வீட்டுக்குள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த வாசல் வழியாக திருடன் உள்ளே வந்து அருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து நகைகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications