15 வயது மாணவனின் காதல்.. அதை எதிர்த்த 13... கத்திக்குத்து.. போலீஸ் விசாரணை!
கோவை: காலம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. 10ம் வகுப்பு மாணவனின் காதலை, 7ம் வகுப்பு படித்த மாணவன் எதிர்த்துள்ளான். இந்த மோதலில் 10ம் வகுப்பு மாணவனை 7ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி விட்டான்.
சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராம் என்பவரின் மகன் ஸ்ரீராம் (நிஜப் பெயர் அல்ல). 15 வயதாகும் ஸ்ரீராம் 10ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவியைக் காதலித்துள்ளான் ஸ்ரீராம். ஆனால் இந்தக் காதலுக்கு அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளான்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பள்ளியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ஆதரவாக சிலர் சேர்ந்து பள்ளியிலேயே சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டின் அருகே ஸ்ரீராம் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 7ம் வகுப்பு மாணவனும், அவனது 17 வயது நண்பர் ஒருவரும் சேர்ந்து ஸ்ரீராமிடம் சண்டை பிடித்துள்ளனர். பின்னர் கத்தியால் அவனை சரமாரியாக குத்தி விட்டு ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தோர் காயமடைந்த ஸ்ரீராமை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்திய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications