கோழிக்குஞ்சுகள் இறந்ததால் ஆத்திரம்... 39 தெருநாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற விவசாயி!
நாய்கள் கடித்ததால்தான் இரு கோழிக்குஞ்சுகள் இறந்ததாக நினைத்துக் கொண்டு வேலூர் அருகே விவசாயி ஒருவர் 39 தெருநாய்களை விஷம் வைத்து கொன்றுள்ளார்.
வேலூர்: நாய்கள் கடித்தததால் கோழிக்குஞ்சுகள் இறந்ததாக கருதி ஒன்றல்ல இரண்டல்ல ஒரு வீட்டு நாய் உள்பட 40 நாய்களை வேலூர் விவசாயி விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அருகே உள்ளது பசுமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இறந்த தெருநாய்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் கேவி குப்பம் போலீஸில் கூறிய புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த வல்லவன் என்ற விவசாயி கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் இரு குஞ்சுகள் கடந்த வாரம் இறந்தன. தெருநாய்கள் கடித்ததால்தான் தனது கோழிக் குஞ்சுகள் இறந்ததாக வல்லவன் கருதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வல்லவன் கறி சோற்றில் விஷம் கலந்து அதை பழைய கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள், தெரு முனைகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் வைத்தார். இதை உண்ட நாய்கள் இறந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
சென்னையில் வேலை பார்த்து வரும் கதிரவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பசுமாத்தூர் கிராமத்துக்கு வந்தார். அப்போது அவரது வீட்டு நாய் வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தது. இதையடுத்து அவரும் கேவி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விவசாயி வைத்ததாக சொல்லப்படும் விஷ உணவை உட்கொண்டு ஒரு வீட்டு நாயும், 39 தெரு நாய்களும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த நாய்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவை இறந்ததற்கான காரணத்தை கொண்டே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காலடி கிராம பஞ்சாயத்தில் 40 தெருநாய்களை கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், தெருநாய்கள் அழிப்பு குழுவினரும் அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications