கோழிக்குஞ்சுகள் இறந்ததால் ஆத்திரம்... 39 தெருநாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற விவசாயி!
நாய்கள் கடித்ததால்தான் இரு கோழிக்குஞ்சுகள் இறந்ததாக நினைத்துக் கொண்டு வேலூர் அருகே விவசாயி ஒருவர் 39 தெருநாய்களை விஷம் வைத்து கொன்றுள்ளார்.
வேலூர்: நாய்கள் கடித்தததால் கோழிக்குஞ்சுகள் இறந்ததாக கருதி ஒன்றல்ல இரண்டல்ல ஒரு வீட்டு நாய் உள்பட 40 நாய்களை வேலூர் விவசாயி விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அருகே உள்ளது பசுமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை முதல் இறந்த தெருநாய்களின் உடல்கள் ஆங்காங்கே கிடந்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

அப்பகுதி மக்கள் கேவி குப்பம் போலீஸில் கூறிய புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த வல்லவன் என்ற விவசாயி கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் இரு குஞ்சுகள் கடந்த வாரம் இறந்தன. தெருநாய்கள் கடித்ததால்தான் தனது கோழிக் குஞ்சுகள் இறந்ததாக வல்லவன் கருதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வல்லவன் கறி சோற்றில் விஷம் கலந்து அதை பழைய கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள், தெரு முனைகள், விவசாய நிலங்கள், கடைகள் ஆகிய இடங்களில் வைத்தார். இதை உண்ட நாய்கள் இறந்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
சென்னையில் வேலை பார்த்து வரும் கதிரவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பசுமாத்தூர் கிராமத்துக்கு வந்தார். அப்போது அவரது வீட்டு நாய் வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தது. இதையடுத்து அவரும் கேவி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விவசாயி வைத்ததாக சொல்லப்படும் விஷ உணவை உட்கொண்டு ஒரு வீட்டு நாயும், 39 தெரு நாய்களும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த நாய்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவை இறந்ததற்கான காரணத்தை கொண்டே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கேரளா மாநிலம், எர்ணாகுளம் அருகே காலடி கிராம பஞ்சாயத்தில் 40 தெருநாய்களை கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், தெருநாய்கள் அழிப்பு குழுவினரும் அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications