எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு கரை ஒதுங்கியுள்ளது.

கரை ஒதுங்கிய படகை சோதனை செய்தபோது இலங்கை யாழ்பானத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஸ்ரீராஜ் மற்றும் யசாந்தன் அதில் இருந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்தாகவும், வழி தவறி இங்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.' இதனையடுத்து 2 இலங்கை மீனவர்களையும் வேதாரண்யம் கடற்கரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் மீனவர்கள் இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்ற தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் சந்திரன் முன் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் இருவரையும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் இருவரும் அடைக்கபட்டனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications