தினகரனை சந்தித்த கலைச்செல்வம்- ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்லம் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னை: பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் டிடிவி தினகரனை இன்று எம்.எல்.ஏ.கலைச்செல்வன் சந்தித்து பேசினார். இதனையடுத்து டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள சன் வே ஹோட்டலுக்கு சென்று தங்கியுள்ளனர். நேற்று அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எங்களின் எண்ணிக்கை விரைவில் 80ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம்தான் இருக்கின்றனர் என்பதை நிரூபிப்போம். பல எம்.எல்.ஏ-க்கள் மனதளவில் எங்களோடு இருக்கின்றனர். விரைவில் அது வெளிப்படும் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
அவர் சொன்னது போலவே இன்று கலைச்செல்வம் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன் மூலம் தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 21 ஆனது.