முறைகேடு புகார்.. தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து.. தேர்தல் ஆணையர் உத்தரவு
தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், 2013ல் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு தேர்தலில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.