2ஜி: 2007-ல் ஆ ராசா மத்திய அமைச்சராக பதவியேற்றது முதல் 2017 டிச.21-ல் விடுதலையானது வரை!
Recommended Video
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு இன்று முடிவுக்கு வந்த ஸ்பெக்ட்ரம் -2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு கடந்து வந்த பாதை இதுதான்...
2007
மே - மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றார்.
ஆகஸ்ட்- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு பணிகள் தொடக்கம்
2008
ஜனவரி - முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
2009
அக்டோபர் - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு என சர்ச்சை. மத்திய தொலைத்தொடர்புத் துறை அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பெயர் எதனையும் குறிப்பிடாத வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
2010
மே - கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவுடன் அமைச்சராக இருந்த ஆ. ராசா தொலைபேசியில் பேசிய ஆடியோ லீக்
செப்டம்பர்- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 70,000 ஆயிரம் கோடி முறைகேடு என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.
நவம்பர்- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என மத்திய கணக்குத் தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்தது.
நவம்பர்- மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராசா பதவி விலகினார்.
2011
பிப்ரவரி - ஆ.ராசா, முன்னாள் தொலைத்தொடர்பு செயலாளர் சித்தார்த்தா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா கைது செய்யபட்டனர்
மார்ச் - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உருவாக்கம்.
மே - கருணாநிதி மகள் கனிமொழி, கலைஞர் டிவியின் ஷரத் குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
மே - கருணாநிதி மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் - முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மீது வழக்கு தொடரப்பட்டது.
அக்டோபர் - ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 17 பேர் மீதான விசாரணை தொடங்கியது.
நவம்பர் - கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2012
பிப்ரவரி - அமைச்சராக ஆ. ராசா ஒதுக்கிய 122 நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அதிரடியாக ரத்து.
பிப்ரவரி - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி என அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனு தள்ளுபடியானது.
மே- ஆ. ராசா ஜாமீனில் விடுதலையானார்.
ஆகஸ்ட் - உச்சநீதிமன்றத்திலும் ப. சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடியானது.
2014
ஏப்ரல் - ஆ. ராசா மற்றும் கனிமொழி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
மே - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதலுடன் செயல்பட்டேன் என ஆ. ராசா வாக்குமூலம்.
2015
ஜுன் - கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி முறைகேடாக சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
2017
ஏப்ரல்- சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கின் விவாதங்கள் முடிவடைந்தன.
டிசம்பர் 5- ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று (டிசம்பர் 21-ல்) வெளியிடப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்தார்.
டிசம்பர் 21- குற்றம்சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.